states

img

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன், இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற அதிகாரிகள் மீது தெலுங்கு தேசம் கட்சியின் உண்டி தொகுதி எம்எல்ஏ கே. ரகுராம கிருஷ்ண ராஜூ கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ண ராஜூ தனது புகாரை கடந்த மாதம் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியிருந்ததாகவும், சட்டரீதியாக ஆலோசனைப் பெறப்பட்டு, தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த புகாரில், கிருஷ்ண ராஜூ, தான் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டபோது துன்புறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, கடந்த 2011ஆம் ஆண்டு, கொரோனா தீவிரமடைந்திருந்த நிலையில், தன் மீது பொய் வழக்குப் போடப்பட்டு, தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது துன்புறுத்தப்பட்டதாகவும், முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த அதிகாரிகள் தங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.